search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொந்த வீடு கட்டுவதற்காக காரை திருடி விற்க முயன்ற பட்டதாரி வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட விஜய்.

    சொந்த வீடு கட்டுவதற்காக காரை திருடி விற்க முயன்ற பட்டதாரி வாலிபர் கைது

    • வேடசந்தூர் காக்காதோப்பு பிரிவில் ஒரு கார் சந்தேகத்திற்கிடமாக நீண்டநேரம் நின்று கொண்டிருந்தது.
    • பொள்ளாச்சியில் இருந்து காரை திருடி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காக்காதோப்பு பிரிவில் ஒரு கார் சந்தேகத்திற்கிடமாக நீண்டநேரம் நின்று கொண்டிருந்தது. அப்ேபாது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் அந்த காரையும், காருக்குள் இருந்த ஒரு வாலிபரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் முன்னுக்குபின் முரணான பதில் அளித்தார். மேலும் அவர் போதையில் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவரிடமிருந்த அடையாள அட்டைகளை வைத்து பார்த்தபோது அந்த வாலிபர் கோவை மாவட்டம் பீளமேடு பகுதிைய சேர்ந்த விஜய்(22) என தெரியவந்தது.

    பி.எஸ்.சி ஐ.டி படித்து வந்த இவர் பாதியில் படிப்பை நிறுத்தியுள்ளார். கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான விஜய் அதன்பிறகு லாரி டிரைவராக வேலைக்கு சென்றுள்ளார். அப்போது சொந்த வீடு கட்டுவதற்காக ரூ.8லட்சம் வங்கி கடன் வாங்கினார்.

    நிரந்தர வருமானம் இல்லாததால் வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். அதன்பிறகு பொள்ளாச்சி மகாலிங்கபுரத்திற்கு வேலை தேடி சென்றார். அங்கு வாகனங்கள் கன்சல்டிங் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

    அங்கிருந்த பதிவு செய்யப்படாத புதிய மாருதி காைர திருடி அதை விற்பதற்காக கொடைக்கானல் எடுத்து வந்தார். கொடைக்கானலுக்கு செல்ல வழி தெரியாததால் திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் சென்றார். காக்காதோப்பு பிரிவில் கார் வந்தபோது பெட்ேரால் இல்லாமல் நின்றுவிட்டது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் போன் செய்து உதவி கேட்டுள்ளார். அப்போதுதான் போலீசாரிடம் விஜய் சிக்கி கொண்டார்.

    இந்த கார் பொள்ளாச்சியில் இருந்து திருடிவந்ததையடுத்து உரிமையாளரை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் விஜய் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    Next Story
    ×