search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கிராம உதவியாளர்  பதவிக்கு எழுத்து தேர்வு
    X

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பதவிக்கு எழுத்து தேர்வு

    • 04.12.2022 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது.
    • குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் காலி பணியிடமாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கு இணையவழியாக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கும்,வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள் இராணுவத்தினர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட நபர்களுக்கும், எழுத்து தேர்வு எதிர்வரும் 04.12.2022 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது.

    இதில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, நீலமங்கலம் ஏகேடிமெமோரியல் வித்யா சாகேத் (சி.பி.எஸ்.சி) பள்ளியிலும், சங்கராபுரம் வட்டத்தில் உள்ளகிராமங்களுக்கு, சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சின்னசேலம்வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, சின்னசேலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கல்வராயன் மலை வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, ஏகலைவா அரசு ஆண்கள் மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியிலும், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு உளுந்தூர்பேட்டை பெஸ்கிமேல்நிலைப் பள்ளியிலும், எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

    மேற்படி எழுத்து தேர்வுக்கான நுழைவுத் தேர்வு சீட்டு விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும். இக்குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்ளத் தெரியாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள் இராணுவத்தினர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட நபர்களுக்கான நுழைவுச்சீட்டு சம்பந்தப்பட்ட நபர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×