போலீஸ் பணிக்கு 27-ந் தேதி எழுத்து தேர்வு தேனி மாவட்டத்தில் 10,760 பேர் எழுதுகின்றனர்

2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் தீயணை ப்பாளர் பணிகளுக்கான தேர்வு தேனி மாவட்டத்தில் 27-ந் ே ததி நடைபெறுகிறது. மாவட்டத்தில் 1320 பெண்கள் உள்பட மொத்தம் 10760 பேர் விண்ணப்பித்து ள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் தீயணை ப்பாளர் பணிகளுக்கான தேர்வு தேனி மாவட்டத்தில் 27-ந் ே ததி நடைபெறுகிறது. தேனி கம்மவர் சங்கம் மெட்ரிக் பள்ளி, கொடுவி லார்பட்டி என்ஜினீயரிங் கல்லூரி, தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி, மேரி மாதா மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 9 இடங்களில் அமைக்க ப்பட்டுள்ள 13 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

மாவட்டத்தில் 1320 பெண்கள் உள்பட மொத்தம் 10760 பேர் விண்ணப்பித்து ள்ளனர். தேர்வுக்கு விண்ண ப்பித்து அழைப்பாணை பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரை தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு நடைபெறும். தமிழ் மொழி தகுதித் தேர்வில் 80 கேள்விகளும், முதன்மை எழுத்துத் தேர்வில் 70 வினாக்கள் என மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு மையங்களில் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது மற்றும் குறித்த நேரத்தில் வருவதற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்துவது குறித்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com