search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்
    X

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்

    • தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • நாளை காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்கள், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்கள், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் ஹிமான்ஷூ தலைமையிலும், ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் வீரேஷ் தலைமையிலும் நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    நாளை காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்கள், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்கள், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.

    இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அது குறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு.ஏ.என். எண், தொலைபேசி எண் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×