search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
    X

    கோவையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    • கட்டிட உரிமையாளர் கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    • சிவமணியை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கோவை,

    திண்டுக்கல் மாவட்டம் திம்மண்ணநல்லூரை சேர்ந்தவர் சிவமணி முத்து (வயது26). கட்டிட தொழிலாளி.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த துர்க்காதேவி(19) என்பவரும் காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் கோவை சோமனூர் சாமளாபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர்.

    சம்பவத்தன்று இவர் சின்னியம்பாளையம் தங்கம்மன் நகரில் ஒரு கட்டிடத்தில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிவமணியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் கருகி உயிருக்கு போராடினார்.

    இதனைப்பார்த்த சக ஊழியர்கள் சிவமணியை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவமணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து உடனே அவரது காதல் மனைவி துர்க்காதேவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்துசென்று தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    இதுகுறித்து துர்க்கா தேவி பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் அஜாக்கிரதையாக பாதுகாப்பு உபகரணம் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்தியதாக என்ஜினியர் சுரேஷ்(36) மற்றும் கட்டிட உரிமையாளர் கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 7 மாதத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×