search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்சோவில் கைதான தொழிலாளி சேலம் சிறையில் அடைப்பு
    X

    போக்சோவில் கைதான தொழிலாளி சேலம் சிறையில் அடைப்பு

    • கடந்த மாதம் 19-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டி ருந்தார்.
    • அந்த மாணவியிடம் ரவிக்குமார் ஆசை வார்த்தை கூறி பேசி உள்ளார். பின்னர் பப்ஸ் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40), கூலித்தொழி லாளி. இவர் 15 வயதுடைய 9-ம் வகுப்பு மாண வியை பள்ளிக்கு செல்லும் போதும், வரும் போதும் கேலி கிண்டல் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டி ருந்தார். வழியில் அந்த மாணவியிடம் ரவிக்குமார் ஆசை வார்த்தை கூறி பேசி உள்ளார். பின்னர் பப்ஸ் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து வீட்டுக்கு சென்ற அந்த மாணவி, நடந்த சம்பவங் களை அவரது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

    இதுகுறித்து பள்ளி மாணவி யின் தாயார் தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், ரவிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ரவிக்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கைதான ரவிக்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்த பப்ட்டு சேலம் சிரையில் அடைக்கபப்ட்டார்.

    Next Story
    ×