search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே  நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்
    X

    விஸ்வநாதபேரியில் ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை யூனியன் சேர்மன் பொன்முத்தையாபாண்டியன் திறந்து வைத்த போது எடுத்த படம்.


    சிவகிரி அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்

    • வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் முயற்சியால் தென்மலையில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
    • சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் ஊராட்சிமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    சிவகிரி:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் ராஜா எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி, வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் முயற்சியால் தென்மலையில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். தென்மலை ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் தென்மலை குமார், முருகன்சாமிநாதன், கிளைச் செயலாளர்கள் கருத்தப்பாண்டியன், முருகேசன், பாபுராஜ், தி.மு.க. நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதிய கட்டிடம்

    சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் ஊராட்சிமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.


    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதி மணிகண்டன், துணைத் தலைவர் காளீஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ், கிளை செயலாளர்கள் ராமமூர்த்தி, குருநாதன், ஊராட்சி மன்ற செயலர் உமாமகேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள், மைதீன்கனி, முருகன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அங்கன்வாடி மையம்

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், நாரணாபுரம் கிராம ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடமும், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணிகளுக்கு வாசுதேவ நல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் பூமி பூஜை செய்து பணி தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயராம், ஊராட்சி மன்றத் தலைவர் மாரியம்மாள், துணைத் தலைவர் திருமேனிராஜ், ஒன்றிய உதவி பொறியாளர் அருள் நாராயணன், கிளை செயலாளர் விஜயகுமார், ஒன்றிய பிரதிநிதி அந்தோணி, அங்குராஜ், வார்டு உறுப்பினர்கள் மாடசாமி, மாரியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×