search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர், கழிப்பிட வசதி கேட்டு நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்
    X

    காலிக்குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை படத்தில் காணலாம்.

    குடிநீர், கழிப்பிட வசதி கேட்டு நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகளுக்கும்,பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநக ராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு ஊருடையார்புரம் பொதுமக்கள் தமிழர் விடுதலைக்களம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊருடை யார்புரம் பகுதியில் பொதுப்பயன்பாட்டில் உள்ள கழிப்பிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

    15-வது வார்டு நதிபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது திடீரென பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மேயர் மாநகராட்சி கமிஷனரை நேரில் சந்தித்து மனுக்களை கொடுத்து விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×