search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
    X

     பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

    • வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு போதைப் பொருட்கள், செல் போன் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் அதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

    நெல்லை:

    வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    பள்ளி முதல்வர் முருகவேல் வரவேற்று பேசினார். இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி கலந்து கொண்டு குழந்தைகள் கடத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், மாணவிகள் தற்போது உள்ள சூழ்நிலையில் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துக் கூறினார்.

    மேலும் மாணவர்களுக்கு போதைப் பொருட்கள், செல் போன் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் அதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் விளக்கி பேசினார்.

    Next Story
    ×