search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்  கூடுதல் கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்
    X

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்

    • ஒரு பெண் வழக்கம்போல் மனுவை வழங்கி விட்டு, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
    • கூடுதல் ஆட்சியர் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் மனுக்கள் பெற்றுவந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் வழக்கம்போல் மனுவை வழங்கி விட்டு, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

    அப்போது அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அலுவலக வளாகத்தில் இருந்து அழைத்து வெளியில் வரப்பட்டு, பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சேர்ந்த சத்தியவேணி. நான் வசிக்கக்கூடிய பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வீடு கட்டி இருந்து வருகின்றேன்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 4 பேர் திடீரென்று என் வீட்டை இடித்து விட்டனர். மேலும் எனது மகன் மற்றும் மகளை அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இது மட்டுமன்றி வீட்டிலிருந்த ஒரு லட்சத்து 27 ஆயிரம் பணத்தையும் திருடி சென்று விட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது போலீசார் கூறுகையில், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுப்பார்கள் ஆகையால் இது போன்ற நடவடிக்கையில் இனி வருங்காலங்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் ஆட்சியர் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×