search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி-மகனுடன் சென்ற போது பரிதாபம்
    X

    மானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி-மகனுடன் சென்ற போது பரிதாபம்

    • கணேஷ் வயலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தாய் ஆறுமுகத்தை ஏற்றிக் கொண்டு சென்றார்.
    • ரஸ்தா பகுதியில் சென்ற போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதியது.

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள பட்டவர்த்தி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி ஆறுமுகம் (வயது45). இவர்களது மகன் கணேஷ் (23).

    பெண் பலி

    இந்நிலையில், கணேஷ் தங்களது வயலுக்கு செல்வதற்காக இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் தாய் ஆறுமுகத்தை ஏற்றிக் கொண்டு சென்றார்.அவர்கள் நெல்லை-சங்கரன்கோவில் சாலை மானூர் ரஸ்தா பகுதியில் சென்ற போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் கணேஷ் படுகாயமடைந்தார்.

    டிரைவரிடம் விசாரணை

    தகவலறிந்ததும் மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக காரை ஓட்டி வந்த சந்திப்பு வீரராகவபுரத்தை சேர்ந்த கணேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×