search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிலம்ப போட்டியில் வெற்றிபெற்ற  வீரர்களுக்கு பரிசளிப்பு
    X

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், , ஒன்றிய குழு உறுப்பினருமான பாரப்பட்டி சுரேஷ் குமார், மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை அய்யனார் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். அருகில் சிவம் சிலம்பம் அறக்கட்டளை தலைவர் வி.மதையான் உள்ளார்.

    சிலம்ப போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு

    • தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றன. 2-வது நாளான இன்று ஒற்றை கம்பு, தொடுமுறை உள்ளிட்ட 5 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
    • இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

    பனமரத்துப்பட்டி:

    மல்லூர் சிவம் சிலம்பம் அறக்கட்டளை மற்றும் சிவம் சிலம்பம் தற்காப்புக் கலை பயிற்சியகம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றன. 2-வது நாளான இன்று ஒற்றை கம்பு, தொடுமுறை உள்ளிட்ட 5 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

    இதன் பரிசளிப்பு விழா நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக 5 கிராம் வெள்ளியும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக தலா 4 கிராம் வெள்ளி, 3 கிராம் வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது.

    பரிசுகளை சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், , ஒன்றிய குழு உறுப்பினருமான பாரப்பட்டி சுரேஷ் குமார், மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை அய்யனார் ஆகியோர் வழங்கினர். சிவம் சிலம்பம் அறக்கட்டளை தலைவர் வி.மதையான் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தார்.

    Next Story
    ×