search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி ராம்சந்த் பகுதி சாலை சீரமைக்கப்படுமா?  பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X

    கோத்தகிரி ராம்சந்த் பகுதி சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    • 2ஆண்டுகளுக்கு மேல் சரிசெய்யப்படாமலே உள்ளது.
    • பொதுமக்கள் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் வரையிலான சாலை வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும், சரக்கு வாகனங்கள் செல்ல ஒரு முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் நெரிசல்கள் அதிகமாக காணப்படும். இந்த சாலையின் ஒரு பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்க்காக நடைபாதையும் மறு பகுதியில் லாரி மற்றும் வேன்கள் நிறுத்தும் ஸ்டாண்ட் ஆகா உள்ளது இதற்கு இடையில் இருக்கும் சாலை பழுதடைந்து கடந்த 2ஆண்டுகளுக்கு மேல் சரிசெய்யப்படாமலே உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×