search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்கோட்டையில் சேதம் அடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை
    X

    ஊத்துக்கோட்டையில் சேதம் அடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை

    • உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.
    • புது பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை.

    ஊத்துக்கோட்டை:

    ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.

    இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, நந்தனம், சுப்பாநாயுடு கண்டிகை, அச்சம

    நாயுடு கண்டிகை, காரணி, சுருட்டப்பள்ளி ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் ஆரணி, புதுவாயல் வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.

    தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து நிலத்தடி நீர்மட்டம் பெருக சுருட்டபள்ளியில் 1950- ம் ஆண்டில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்பட்டது.

    இந்த தடுப்பு அணையில் இருந்து ஊத்துக்கோட்டை அருகே அம்பேத்கார் நகரில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரிக்கு ஆரணி ஆற்று கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    இப்படி திறந்து விடப் படும் தண்ணீர் அண்ணாநகர், ஊத்துக்கோட்டை வழியாக பாய்ந்து அம்பேத்கர் நகர் ஏரிக்கு செல்லும்.

    சுருட்டப்பள்ளி தடுப்பணையில் இருந்து அம்பேத்கர் நகர் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் சக்திவேடு சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

    இதனை கருத்தில் கொண்டு 1953-ம் ஆண்டில் ஊத்துக் கோட்டை நகர எல்லையில் சத்தியவேடு சாலையில் சிறிய பாலம் அமைக்கப்பட்டது.

    இந்தப் பாலம் வழியாகத்தான் ஊத்துக்கோட்டையில் இருந்து ஆந்திராவில் உள்ள சத்தியவேடு, தடா, சூலூர்பேட்டை, நெல்லூர், ராக்கெட் ஏவுதளம் அமைந் துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது.

    குறிப்பாக இந்த சாலை வழியாகத்தான் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற் சாலைகளில் தயாரிக்கப்படும் ராக்கெட் உதிரி பாகங்கள், கனரக வாகனங்கள் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    மேலும் நெல்லூர் - சென்னை இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களை இந்த பாலம் வழியாக ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பூந்தமல்லி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளுக்கு திருப்பி விடப்படும்.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டையில் உள்ள இந்த பாலம் கடந்த சில மாதங்களாக பழுதடைந்து உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் போது பாலத்தில் கடும் அதிர்வு ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த அதிர்வால் பாலத்தில் சில இடத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இதேபோல் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களிலும் லேசாக விரிசல் ஏற்பட்டு உள்ளன. பாலத்தில் உள்ள விரிசல்களில் செடி கொடிகள் வளர்ந்துள்ளன.

    கடந்த சில் நாட்களுக்கு முன்னர் பாலத்தின் இடது புறத்தில் மெகா பள்ளம் ஏற்பட்டது. இதனால் சுமார் 8 மணி நேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. பொதுமக்கள் ஒன்று திரண்டு மெகா பள்ளத்தை பாறாங்கற்களை கொண்டு சீரமைத்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு பழுதடைந்த இந்த பாலத்தை அகற்றிவிட்டு புது பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×