search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை நாசப்படுத்திய காட்டுப்பன்றிகள்
    X

    காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய நெற்பயிர்கள்

    கயத்தாறு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை நாசப்படுத்திய காட்டுப்பன்றிகள்

    • ராஜாபுதுக்குடி கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.
    • குளக்கரைகளில் சுற்றி திரிந்த காட்டு பன்றிகள் இரவில் கூட்டம், கூட்டமாக வயல்களில் புகுந்து நெற்பயிற்களை சேதப்படுத்தியும் சென்றுள்ளது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காடுகள், குளக்கரைகளில் சுற்றி திரிந்த காட்டு பன்றிகள் இரவில் கூட்டம், கூட்டமாக வயல்களில் புகுந்து நெற்பயிற்களை சேதப்படுத்தியும் சென்றுள்ளது.

    காலையில் வயலுக்கு சென்ற விவசாயிகள் அதனை கண்டு கண்ணீர் விட்டனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளான ஆறுமுகசாமி, மாடசாமி, அண்ணாவி, சவுந்தரராஜன் ஆகிேயார் கூறும்போது பல மாதமாக நாங்கள் உழைத்த உழைப்பு அனைத்தும் தற்போது இந்த காட்டுப்பன்றிகளால் வீணாகி போனது. சேதமான பயிற்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க மாவட்ட நிர்வாகம், வேளாண்மை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மேலும் விவசாய நிலங்களை சேதமாக்கிய காட்டுப்பன்றிகளை இங்கிருந்து விரட்ட வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×