search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரியல் எஸ்டேட் அதிபர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
    X

    ரியல் எஸ்டேட் அதிபர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது

    • எனக்கு பள்ளி பருவம் முதலே காதல் இருந்தது.
    • திருமணத்திற்கு பிறகும், எனக்கு அவருடன் கள்ளக்காதல் இருந்தது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த 19.03.2023 அன்று எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? என விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது43) என்பது தெரியவந்தது.

    ரியல் எஸ்டேட் அதிபரான பிரகாசுக்கு, லட்சுமி (36) என்ற மனைவி உள்ளார். இதையடுத்து அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்பது போல கூறிய லட்சுமி பின்னர் போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் தனது கணவரை தானே அடித்துக்கொலை செய்ததாகவும், தனது கள்ளக்காதலன் சின்னராஜ் உதவியுடன் உடலை சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு சென்று எரித்ததையும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து லட்சுமி, அவரது கள்ளக்காதலன் சின்னராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான லட்சுமி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் பிரகாசுக்கும் திருமணம் நடந்தது. எனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் போதையில் வந்து அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

    கடந்த 18.03.2023 அன்றும் குடித்து விட்டு என்னிடம் வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். அப்போது நான் வீட்டில் இருந்த கட்டையால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். அதில் அவர் இறந்தார்.

    இதையடுத்து உடலை அங்கிருந்து மறைக்க முடிவு செய்தேன். இதற்காக எனது கள்ளக்காதலன் சின்னராஜூக்கு (38) போன் செய்தேன். சின்னராஜ் சரக்கு வேன் டிரைவர் ஆவார். அவருடன் எனக்கு பள்ளி பருவம் முதலே காதல் இருந்தது.

    திருமணத்திற்கு பிறகும், எனக்கு அவருடன் கள்ளக்காதல் இருந்தது. உடலை எரித்தோம் நான் போன் செய்து அழைத்ததும் சின்னராஜ் எங்கள் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் எனது கணவரின் உடலை அங்கிருந்து எடுத்து சரக்கு வாகனத்தில் போட்டு சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு வந்தோம். ஆள் நடமாட்டம் இல்லை என்பதை அறிந்ததும் அங்கு உடலை கொண்டு சென்று தீ வைத்து எரித்து விட்டு வந்து விட்டோம்.

    உடலை எரித்ததால் போலீசார் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தோம். ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    கைதான அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் லட்சுமியை சேலம் பெண்கள் சிறையிலும், சின்னராஜை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

    Next Story
    ×