search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் ஒரு பயனாளிக்கு உதவித்தொகை வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் ரவிச்சந்திரன் உள்ளார்.

    தென்காசி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

    • தொழிலாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண மாவட்டம் தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
    • கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக ஆய்வு கூட்டம் மற்றும் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் கலந்துகொண்டு 50 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஒரு பயனாளிக்கு ரூ.2.05 லட்சம் விபத்து மரண உதவி தொகை, 11 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் இயற்கை மரண உதவி தொகை உள்ளிட்டவை அடங்கும்.

    இக்கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு பெற்ற கட்டுமான

    தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் கால தாமதமின்றி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்து அக்குறைகளுக்கு தீர்வு காண மாவட்டம் தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது பதிவுப்பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவி தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தென்காசி தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பி ரசன்னா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×