ஆலங்குளம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

விழாவிற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கி முன்னாள் எம்.பி. ராமசுப்பு பேசிய காட்சி.
நலத்திட்ட உதவிகள் வழங்கி முன்னாள் எம்.பி. ராமசுப்பு பேசிய காட்சி.
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

காங்கிரஸ் தென்காசி மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். வடக்கு வட்டார செயலாளர் நெட்டூர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார்.

விழாவில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வந்த கல்வி கடன் திட்டம் மற்றும் உணவுப்பொருள் பாதுகாப்பு திட்டத்தின் அவசியத்தையும், அதன் பயனையும் எடுத்துக்கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் ஆலங்குளம் நகர துணை தலைவர் லெனின், ஜெயம், ஜவுளிக்கடை செல்வராஜ், மகாராஜா சிங் , கடங்கநேரி ஆராய்ச்சி மணி, இனிகோ, வெள்ளத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com