search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
    X
    மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருநங்கையருக்கு அடையாள அட்டையை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கிய போது எடுத்தபடம்.


    தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

    • மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 5 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 5 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை வழங்கினார். மேலும், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற நகராட்சி, பேரூராட்சி அளவிலான இலக்கியப் போட்டிகளில் கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 18 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை யும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 மதிப்பிலான மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரங்களையும் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

    மேலும், கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 356 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப் பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மகளிர் திட்ட இயக்குநர் குருநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாரா யணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் (பொ) மாரியப்பன், உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×