search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் தி.மு.க. இளைஞர் அணியின் வாகன பேரணிக்கு வரவேற்பு - மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
    X

    தூத்துக்குடி வந்த தி.மு.க. வாகன பேரணியை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்ற காட்சி.

    தூத்துக்குடியில் தி.மு.க. இளைஞர் அணியின் வாகன பேரணிக்கு வரவேற்பு - மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

    • வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது உருவசிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அதனைத்தொடர்ந்து தூத்துக்குடிக்கு வந்த தி.மு.க. மோட்டார் சைக்கிள் பேரணியை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    தூத்துக்குடி:

    வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது உருவ சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.

    இதில் துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாள ரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார், பகுதி செய லாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் மாரியப்பன், பொன்னப்பன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர், தூத்துக்குடி - எட்டையாபுரம் ரோட்டில் சாலை ஓரத்தில் போக்கு வரத்திற்கும், மழை நீர் வடிகாலுக்குள் செல்வ தற்கும் இடைஞ்சலாக இருந்த மணல் திட்டுக்கள் அகற்றும் பணி, கிருஷ்ண ராஜபுரம் பகுதியில் நடை பெற்று வரும் புதிய வடிகால் மற்றும் தார் சாலை பணி களையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து தூத்துக்குடிக்கு வந்த தி.மு.க. மோட்டார் சைக்கிள் பேரணியை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது மேயர் கூறுகை யில்,

    தமிழ்நாட்டின் மாநில உரிமை மீட்புக்காக தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் சேர்க்கும் விதமாக பேரணியாக செல்லும் 188 வாகன பேரணியை வரவேற்கிறோம் என்றார்.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் பிரதீப், மகேந்திரன், ராதா கிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், மாநகர இளைஞ ரணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் சங்கர நாராயணன், ரவி, முகமது, வக்கீல் டி.டி.சி.ஆர்.பிரவின்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×