search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்:    விவசாயிகள் வேதனை
    X

    கள்ளக்குறிச்சி அருகே மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் வேதனை

    • 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பரவில் மக்கா ச்சோளம் பயிர் செய்துள்ள னர்.
    • மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. மருந்து தெளித்தும் பயனில்லை .

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே அகரகோட்டாலம் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பரவில் மக்கா ச்சோளம் பயிர் செய்துள்ள னர். தொடர்ந்து விவசாயிகள் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு பராமரித்து வந்தனர். இந்நிலையில் மக்காச்சோள பயிரில் கடந்த சில வாரங்க ளாக படைப்புழுக்கள் தாக்குதல் காணப்பட்டது. இதை யொட்டி விவசாயிகள் பயிர்களுக்கு மருந்து தெளித்த னர். இருப்பினும் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறையவில்லை என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அகர கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 44) ஆட்டோ டிரைவர். இவர் தனக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் கடந்த 60 நாட்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிரிட்டு பராமரித்து வருகிறார். இந்நிலையில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. மருந்து தெளித்தும் பயனில்லை புழுக்கள் சாகாமல் உயிருடன் இருக்கிறது.

    ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்து பயிர்களை பராமரித்து வந்த நிலையில் படைப்புழுக்கள் தாக்குதலால் பயிர்கள் நாசமாகி போனது. எனவே சம்மந்தப்பட்ட வேளாண்மை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் மேலும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மருந்து வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×