search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்பிடிப்பில் தொடரும் மழை பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
    X

    முல்லைபெரியாறு அணை

    நீர்பிடிப்பில் தொடரும் மழை பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

    • முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து ள்ளது. நேற்று முன்தினம் 129.05 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 129.50 அடியாக உயர்ந்தது. இன்று காலை 130.85 அடியாக அதிகரி த்துள்ளது.

    நேற்று 2738 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5258 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1722 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4896 மி.கனஅடியாக உள்ளது.

    அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.20 அடியாக உள்ளது. வரத்து 1579 கனஅடி, திறப்பு 969 கனஅடி, இருப்பு 2915 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 73.30 அடியாக உள்ளது.

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான குரங்கனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் போடியின் முக்கிய நீர்ஆதா ரமான கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே போடி அருகில் உள்ள அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி பொதுமக்கள் இங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பொதுப்பணி த்துறையி னர் சார்பில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை இங்கு செல்ல அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்த ப்பட்டுள்ளது. வெள்ள ப்பெருக்கால் ராஜவா ய்க்கால் மூலம் போடியில் உள்ள குளங்களுக்கு செல்லும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு தற்போது பெய்து வரும் மழையினால் போடி பகுதியில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

    பெரியாறு 67, தேக்கடி 31, கூடலூர் 5.7, உத்தமபாளையம் 4.4, வீரபாண்டி 2.4, போடி 5.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×