களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது - சுற்றுலா பயணிகள் கவலை

களக்காடு தலையணைக்கு தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தலையணையில் குவிந்து காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்வார்கள்.
களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதை படத்தில் காணலாம்.
களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதை படத்தில் காணலாம்.
Published on

களக்காடு:

களக்காடு தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் முதல் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அத்துடன் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளம் தணிந்ததால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இதற்கிடையே களக்காடு மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. பனி பொழிவு காணப்படுகிறது. பருவமழையும் சரிவர பெய்ய வில்லை. இதன் காரணமாக தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று ஆயி ரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தலையணையில் குவிந்து காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்தாண்டு தலைய ணையில் தண்ணீர் வரத்து குறைந்து வருவதால் காணும் பொங்கல் களை கட்டுமா? என்று சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com