search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மேலும் கூடுதல் தண்ணீர் திறப்பு
    X

    கோப்பு படம்

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மேலும் கூடுதல் தண்ணீர் திறப்பு

    • முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மேலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    • இதனால் 4 ஜெனரேட்டர்கள் இயக்கி மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் முல்லை–ப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 127.70 அடியாக உள்ளது. நேற்று 799 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1457 கன அடியாக அதிகரித்துள்ளது.

    நேற்று வரை 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிைலயில் இன்று காலை முதல் 1678 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் முழுமையாக இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. நீர் இருப்பு 4201 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 52.99 அடியாக உள்ளது. வரத்து 939 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2409 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.18 அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 22, தேக்கடி 17.4, கூடலூர் 10.8, உத்தமபாளையம் 11.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×