

தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாசில்தார் பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கள்ளக்குறிச்சி வட்டாட்சியரை இடைக்கால பணி நீக்கத்தை கண்டித்தும், அதை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் காத்திருப்பு போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்ட சேர்ந்தவர்கள் அந்த அந்த மாவட்டத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தி வருவதாகவும் அதனுடைய தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் காத்துருப்பு போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தனர்.