search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாத்திர உற்பத்தி தொழிலாளர் சம்பள உயர்வு - ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும்
    X

    பாத்திர உற்பத்தி தொழிலாளர் சம்பள உயர்வு - ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும்

    • கடந்த முறை ஏற்படுத்தப்பட்ட சம்பள ஒப்பந்தம் நேற்று முன்தினம் 31ந் தேதி நிறைவு பெற்றது.
    • அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பினர்.

    அனுப்பர்பாளையம்,ஜன.2-

    திருப்பூர் அனுப்பர் பாளையத்தில் 250 பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

    கடந்த முறை ஏற்படுத்தப்பட்ட சம்பள ஒப்பந்தம் நேற்று முன்தினம் 31ந் தேதி நிறைவு பெற்றது. புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பினர்.

    இதனையொட்டி எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்தினர் தொழில் மந்த நிலையில் உள்ளதால் பழைய சம்பள ஒப்பந்தத்தையே மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பது, அதன்பின் புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து பேசுவது என தொழிற்சங்க கூட்டு கமிட்டிக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து விவாதிக்க அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு., சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் உற்பத்தியாளர் சங்கத்தினர் அனுப்பிய கடிதத்தின்படி தற்போதைய கூலியை ஓராண்டுக்கு நீட்டிப்பது என்ற கருத்தை முற்றிலும் நிராகரிப்பது,ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் இன்றைய விலைவாசி உயர்வும் பாத்திர தொழிலாளர்களின் வாழ்வு நிலையையும் கணக்கில் கொள்ளாத தாங்கள் சங்கத்தின் இந்த அணுகுமுறை பாத்திர உற்பத்தியாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான சமூக உறவை பாதிக்கும்.இத்தகைய நிலைப்பாட்டிலிருந்து மாற்றத்தை உருவாக்கி சம்பள உயர்வு குறித்து ஒருவார காலத்திற்குள் அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×