புதுப்பேட்டை அருகே கேமரா பொருத்தப்பட்ட கழுகால் பரபரப்பு- போலீசார் விசாரணை

புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.கேமராக்கள் எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பேட்டை அருகே கேமரா பொருத்தப்பட்ட கழுகால் பரபரப்பு- போலீசார் விசாரணை
Published on

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே சித்திரை சாவடி கிராமத்திற்கு இன்று காலை கழுகு ஒன்று பறந்து வந்தது. அது அந்த பகுதியில் இருந்த காமன் கோவில் மேலே பறந்து வந்து அங்கு அமர்ந்தது

அந்தக் கழுகின் முதுகு பகுதி முன்பகுதிகளில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தியை காட்டு தீப்போல கிராமத்துக்குள் பரவியது. அங்கு பொது மக்கள் திரண்டனர்.

இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கழுகு எங்கிருந்து வந்தது. யார் அனுப்பினார்கள் அதில் உள்ள கேமராக்கள் எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com