search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கான கைப்பந்து இறுதிபோட்டி
    X

    இறுதிப்போட்டியை மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கான கைப்பந்து இறுதிபோட்டி

    • 2 அணிகளுக்கு இடையே போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது.
    • வெற்றி பெறும் அணியானது மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.

    தஞ்சாவூர்:

    புதுக்கோட்டையில் இன்று கிழக்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கி நாளை வரை நடக்கிறது.

    இதில் தஞ்சை ,நாகை, பெரம்பலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட கிழக்கு மண்டலங்களை சேர்ந்த மாவட்ட கழகத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.

    முன்னதாக இந்த மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மாவட்டத்தில் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது.

    இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    அதிலிருந்து தஞ்சாவூர் நண்பர்கள் கைப்பந்து கழக அணி, பிள்ளையார்பட்டி சோழன் கைப்பந்து கழக அணிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில்

    நேற்று இரவு விளையாடின.

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியை தஞ்சாவூர் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து 2 அணிகளுக்கு இடையே போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியை மாவட்ட கைப்பந்து கழக துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் டி. ரவிச்சந்திரன், பன்னீர்செல்வம், தமிழ்ச்செல்வன், இளங்கோவன், ரமேஷ் மற்றும் பலர் பார்த்தனர்.

    இதையடுத்து இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் கிழக்கு மண்டல அளவிலான பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் பிள்ளையார்பட்டி சோழன் கைப்பந்து கழக அணி, தஞ்சாவூர் நண்பர்கள் கைப்பந்து கழக அணிகள் விளையாட உள்ளன.

    இதேபோல் கிழக்கு மண்டலங்களில் பதிவு செய்யப்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

    நாளை வரை நடைபெறும்

    இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியானது மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.

    Next Story
    ×