search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி அருகே ம.தி.மு.க. சார்பில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா
    X

    கோவில்பட்டி அருகே ம.தி.மு.க. சார்பில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா

    • வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி வ.உ.சி. யின் புகழை போற்றுவோம் என வாழ்த்தி பேசினர்.

    கோவில்பட்டி:

    வ.உ.சி.யின் 152- வது பிறந்தநாள் விழா கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. ம.தி.மு.க. மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மாரிமுத்து ஏற்பாட்டில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலாளர் சரவணன், கேசவன், நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் கலந்து கொண்டு வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி வ.உ.சி. யின் புகழை போற்றுவோம் என வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் மந்தித்தோப்பு பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி, ம.தி.மு.க. செயற்குழு உறுப்பினர் எல்.எஸ்.கணேசன், ராமமூர்த்தி, சீனிவாசன், பொறியாளர் அணி ராம்குமார், வெங்கடேஷ், மாடசாமி அயோத்தி ராமசாமி, ஜீவா, சுந்தரம், பால்குமார் மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×