search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயமடைந்த பயணிகளை மீட்ட தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.
    X

    தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.

    காயமடைந்த பயணிகளை மீட்ட தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.

    • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு வந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியது.
    • அப்போது அந்த வழியாக வந்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. விபத்து நடந்ததை அறிந்ததும் தனது காரை விட்டு இறங்கி மீட்டு பணியில் ஈடுபட்டார்.

    ராஜபாளையம்

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு ஒரு அரசு பஸ், 42 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு வந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்க அச்சு முறிந்து சக்கரங்கள் கழன்று ஓடியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 16 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். அதே வேளையில் பழங்கள் ஏற்றி வந்த ஒரு சரக்கு வேன் மோதி பஸ்சின் பின்புறம் புகுந்தது.

    அப்போது அந்த வழியாக வந்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. விபத்து நடந்ததை அறிந்ததும் தனது காரை விட்டு இறங்கி மீட்டு பணியில் ஈடுபட்டார். அவருடன் நகரசெயலாளர் ராமமூர்த்தி மற்றும் ஆதரவாளர்கள் அவருக்கு உதவி புரிந்தனர்.

    விபத்தில் காயமடைந்த வேன் டிரைவர் திருமலைக்குமார் (வயது 45), தென்காசி நைனாபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (40) ஆகிய இருவரை ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் 1 மணி நேரம் போராடி மீட்டனர்.

    மீட்கப்பட்ட இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த அரசு பஸ் டிரைவர் வேல்முருகன் (55) மற்றும் பயணிகள் 21 பேர் மீட்கப்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×