search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தையின் மேல் சிகிச்சைக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உதவி
    X

    குழந்தையின் மேல் சிகிச்சைக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ரூ.15 ஆயிரம் வழங்கினார்.

    குழந்தையின் மேல் சிகிச்சைக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உதவி

    • விபத்தில் காயமடைந்த குழந்தையின் மேல் சிகிச்சைக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உதவினார்.
    • குடும்பத்துடன் வந்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாடசாமிகோவில் தெருவில் நீதி மன்றம் அருகே உள்ள சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு பவித்ரா லட்சுமி, ரன்விதா, ராஜேஷ், கார்த்திகா ஆகியோர் குடும்பத்துடன் வந்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்தனர்.

    அவர்கள் கூறுகையில், 5 மாதங்களுக்கு முன்பு சிவகாசி செல்லும்போது குடும்பத்துடன் விபத்துக்கு ள்ளாகி சிகிச்சை பெற்றோம். தற்போது குழந்தையின் மேல்சிகிச்சைக்காக பண உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதைகேட்ட தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உடனடியாக தனது சொந்த செலவில் ரூ.15 ஆயிரத்தை வழங்கியதுடன் டாக்டரிடம் பேசி உயர்ரக மருத்துவ சிகிச்சையை குழந்தைக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

    தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, வார்டு செயலாளர்கள் குழந்தைவேலு, இக்சாஸ், மாயாவி, மதன் ராம்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×