search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர் அமைப்பு தொடக்க விழா
    X

    விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராசிரியர் ஷேக் அப்துல்லாவுக்கு முதல்வர் விஷ்ணுராம் பொன்னாடை போர்த்தினார். அருகில் துறைத்தலைவர் ராமதிலகம், டீன்.மாரிச்சாமி, மாணவி வைஷ்ணவி உள்ளனர்.

    மாணவர் அமைப்பு தொடக்க விழா

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் மாணவர் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.
    • இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமுதாயத்தில் தொழில் நுட்பங்களின் பங்கு, ஆகியோருக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை சார்பில் ''அசோசியேஷன் பார் கம்ப்யூட்டிங் மெஷினரி'' (ஏ.சி.எம்.) என்ற மாணவர் அமைப்பின் தொடக்க விழா நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் தலைமையுரை ஆற்றினார். டீன் மாரிச்சாமி சிறப்புரை ஆற்றினார்.

    சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கணிப்பொறியியல் துறை பேராசிரியர் ஷேக் அப்துல்லா கலந்து கொண்டார்.

    துறையின் 3-ம் ஆண்டு மாணவியும், ஏ.சி.எம். மாணவர் அமைப்பின் தலைவருமான வைஷ்ணவி வரவேற்றார். சிறப்பு விருந்தினரை 3-ம் ஆண்டு மாணவியும், ஏ.சி.எம். மாணவர் அமைப்பின் செயலாளருமான குருகீர்த்திகா அறிமுகம் செய்தார்.

    கணிப்பொறியியல் துறைத்தலைவர் ராமதிலகம், பேராசிரியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ஷேக் அப்துல்லா பேசுகையில், மாணவர்களின் வெற்றிக்கு கல்விப்படிப்பு மட்டுமல்லாது பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர் அமைப்பின் நன்மைகளையும், ஏ.சி.எம். மாணவர் சேப்டரின் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த அமைப்பின் மூலமாக சர்வதேச அளவிலான மற்றும் தேசிய அளவிலான ேபராசிரியர்களின் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, நவீன தொழில் நுட்பங்கள் பற்றியும், அவற்றைக் கையாளுவது எப்படி எனவும் தெரிந்து கொள்ள கருத்தரங்குகள், போட்டிகள் ஆகியவை நடத்தப்படும்.

    இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமுதாயத்தில் தொழில் நுட்பங்களின் பங்கு, ஆகியோருக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஏ.சி.எம். சேப்டர் மற்றும் பி.எஸ்.ஆர்.இ.சி. ஏ.சி.எம். ஸ்டூடண்ட் சேப்டர் ஆகிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர். ஏ.சி.எம். மாணவர் குழு உறுப்பினரும், மாணவியுமான ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

    Next Story
    ×