

ராஜபாளையம்
ராஜபாளையம் ஏ.கே. டி. டிரஸ்டுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் கடைகள் உள்ளன. இதற்கு 2011-12 முதல் 2022-23 வரை சுமார் ரூ.30 லட்சம் நிலுவை தொகை உள்ளது. இந்த டிரஸ்டுக்கும், நகராட்சிக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்தது.
இதில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகும் டிரஸ்ட் அலுவலகம் நிலுவை தொகையை செலுத்தவில்லை. நிலுவை தொகையை செலுத்தக்கோரி அலுவலகம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான கடைகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் பிறகும் நிலுவை தொகைகள் நகராட்சிக்கு செலுத்தப்படவில்லை.
இதையடுத்து ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் வருவாய் அலுவலர் முத்துசெல்வம், வருவாய் ஆய்வர்கள் பாண்டி, நாகராஜ், சிவராமன் மற்றும் நகராட்சி வருவாய் உதவியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், பணியாளர்களால் டிரஸ்ட் அலுவலகத்தை ஜப்தி செய்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.