2 வீடுகளில் கொள்ளை

விருதுநகர் மாவட்டததில் 2 வீடுகளில் கொள்ளை நடந்தது. ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.
2 வீடுகளில் கொள்ளை
Published on

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள வீரார்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். சம்பவத்தன்று பூட்டியிருந்த இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் செல்போன், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் காரியாபட்டி ராயல்கார்டனைச் சேர்ந்த ஜெயபாலன் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் தெற்குரத வீதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (52). கணவரை இழந்த இவர் இட்லி மாவு வியாபாரம் செய்து தனது மகன் சுரேஷ், மகள் பிரியாவை வளர்த்தார். இருவருக்கும் திருமணமாகி கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். சுரேஷ் கடந்த சில மாதங்களாக சம்பள பணத்தை சரியாக கொடுக்கவில்லை. இதனை அவரது தாய் முருகேஸ்வரி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் தாயை சரமாரியாக அடித்து உதைத்தார். தடுக்க வந்த சகோதரி பிரியாவையும் அவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com