search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொல்லியல் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    X

    தொல்லியல் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    • வெம்பக்கோட்டை அருகே தொல்லியல் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
    • தொல்லியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் 35 ஆண்டு களுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் மூலம் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.

    இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல் ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த முதல் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்க அணிகலன், திமிலுடன் கூடிய காளை உருவம், சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குடுவை மற்றும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கழுத்தில் அணி யப்படும் பதக்கம், பெண் சிற்பங்கள், சங்குவளை யல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய், செப்பு நாணயம் உள்ளிட்ட 3 ஆயிரத்து 254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதையடுத்து 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

    இங்கு கண்டெ டுக்கப்பட்ட தொன்மையான பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இங்கு கோடை விடுமுறையில் சுற்றுலா பயணி கள் மற்றும் பொது மக்கள் தொல்பொருட்களை பார்வையிட்டு தொன்மை யான மனிதர்களின் வர லாற்றை அறியும் வகையில் தொல்லியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்ப்பட் டுள்ளது.

    அகழ்வாராய்ச்சி தளத்தில் காட்சிப்படுத்து வதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த வாரம் முதல் கண்காட்சி தொடங்க உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×