search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்
    X

    நெல் கொள்முதல் நிலையம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்

    • ராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • ராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி கருங்குளம் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 6-வது நெல் கொள்முதல் நிலையத்தை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசுகை யில், தொகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளும் அரசிடமே நெற்களை விற்க விரும்புகின்றனர். அந்தளவிற்கு நமது தமிழக வேளாண்மைத்துறை விவசாயிகளின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டடு வருகிறது. விரைவில் சொக்கநாதன்புத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.

    இதில் வேளாண்மை துறை அலுவலர் தனலட்சுமி கருங்குளம், அப்பநேரி கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ரவிச்சந்திரராஜா, உறுப்பினர்கள் பலராம ராஜா, ராமராஜா, கண்ணன் உட்பட ஏராளமான விவ சாயிகள் கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×