search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
    X

    மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

    • மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • அழகம்மாள் தனியாக வசித்து வந்தார்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பொய்யாங்குளம் பகுதியை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 75), தனியாக வசித்து வந்தார். இவரது 2-வது மகன் ஆறுமுகம்(42) திருமணம் செய்யாமல் ஆன்மீகத்தில் ஈடுபட உள்ளதாக தாயிடம் தெரிவித்துள்ளார்.

    இதனால் அவர் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து அழகம்மாள் மயங்கி கிடந்தார். அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×