search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேஜஸ்-வந்தே பாரத் ரெயில் கட்டணத்தை குறைக்க கோரி எம்.பி. வலியுறுத்தல்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணிக்கம்தாகூர் எம்.பி.

    தேஜஸ்-வந்தே பாரத் ரெயில் கட்டணத்தை குறைக்க கோரி எம்.பி. வலியுறுத்தல்

    • தேஜஸ்-வந்தே பாரத் ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
    • மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதிய நிலுவை வழங்காவிட்டால் விருதுநகர் வரும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி காட்டு வேன் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 14 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. விருதுநகர் மாவட் டத்திற்கு மட்டும் ரூ.87 கோடி வழங்கப்பட வேண்டி உள் ளது. தமிழகத்திற்கு ரூ.2,250 கோடி வர வேண்டி உள்ள தாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அர சுக்கு கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அடுத்த வாரம் விருதுநகர் வருகை தரும் மத்திய நிதி மந் திரி 100 நாள் வேலைத்திட்ட ஊதிய நிலுவை வழங்காவிட்டால் அவருக்கு கருப்பு கொடி காட்டுவேன். தீபாவளிக்கு முன்பு இந்த பணியாளர்களுக்கு ஊதிய நிலுவை வழங்க வேண்டும்.

    கமல்ஹாசன் இந்தியா கூட்டணியில் இணைவதை வரவேற்கிறேன். அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். இதற்கு நாங்கள் ஆதரவு தருவோம். ஜி.எஸ்.டி.யை பொருத்தமட்டில் ராகுல் காந்தி பிரதமரானால் மாற்றி அமைக்கப்படும். மத்திய அரசு ஏழை மக்க ளுக்கான ரெயில்களுக்கு கட்டணத்தை அதிகரித்துள் ளது வருத்தம் அளிக்கிறது. தேஜஸ் போன்று வந்தே பாரத் ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். தேஜஸ்ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்.

    ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு வசதியாக கூடுதல் ரெயில் பெட்டி களை இணைப்பதுடன் கட்டணத்தையும் மத்திய அரசு குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விருதுநகர்- மதுரை ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய நிலுவை வழங்ககோரி மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாலகிருஷ்ணசாமி, சிவகுருநாதன், வக்கீல் சீனிவாசன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள். 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×