search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் தொட்டியை திறந்து வைத்த எம்.எல்.ஏ.
    X

    குடிநீர் தொட்டியை திறந்து வைத்த எம்.எல்.ஏ.

    • மருதநத்தம் கிராமத்தில் குடிநீர் தொட்டியை சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சமுதாயக்கூடம் கட்டுமான பணியையும், மருதநத்தம் கிராமத்தில் தரிசுநில மேம்பாட்டு திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள மருதநத்தம் கிராமத்தில் ரூ.18.20 லட்சம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நாட்டார்மங்கலம் அம்மன் கோவில்பட்டி கிராமத்தில் சமுதாயக்கூடம் கட்டுமான பணியையும், மருதநத்தம் கிராமத்தில் தரிசுநில மேம்பாட்டு திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

    இதில் விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், யூனியன் கவுன்சிலர் அமுதா செல்வராஜ், கிராம பஞ்சாயத்து தலைவர் காசிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கற்பகவல்லி, சீனிவாசன், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆவுடையம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனிவாசன் எம்.எல்.ஏ., கிராம பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

    Next Story
    ×