search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க வலியுறுத்தல்
    X

    வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் ஜெயசீலன் கலைந்துரையாடினார்.

    திட்டப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க வலியுறுத்தல்

    • வத்திராயிருப்பு பகுதியில் நடக்கும் திட்டப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க வேண்டும்.
    • அதிகாரிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி மற்றும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி, வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றியம் மேலக்கோபாலபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், 15-வது மானிய நிதி குழுவின் கீழ் ரூ.1.05 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமைய லறை கூடம் புர ணமைக்கப்பட்டுள்ள தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.62 லட்சம் மதிப்பில் உயர் நிலைப் பள்ளியில் சுற்றுச் சு வர் கட்டப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    கான்சாபுரம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.29.69 லட்சம் மதிப்பில் பெரிய ஓடை கால்வாய் வரத்து கால்வாய் மேம்பாடு செய்யப்பட்டு வரும் பணிகளையும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.93.68 லட்சம் மதிப்பில் கான்சாபுரம்-அத்தி கோயில் சாலை பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட கலெக்டர் அவர்கள் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அளவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரை யாடினார்.

    பின்னர், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு பேசினார்.

    ஆய்வின் போது உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) சேதுராமன், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சித்தலைவர் திருமணி தவமணி பெரியசாமி, துணைத் தலைவர் பஞ்சு விக்னேஷ், வட்டாட்சியர் முத்துமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா, வார்டு உறுப்பினர்கள், உதவி பொறியாளர், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×