search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிரோன் ‌மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு
    X

    டிரோன் ‌மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு

    • ராஜபாளையம் அருகே டிரோன் ‌மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது.
    • இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிள்ளையார்சாமி, சிவன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வங்காநல்லூரில் உளுந்து பயிரிட்டுள்ள வயலில் ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி, வேளாண்மை அலுவலர் தனலட்சுமி உள்பட வேளாண்மை அலுவலர்கள் டிரோன் மூலம் மருந்து மற்றும் உரம் தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

    ஒரு ஏக்கர் பரப்பளவில் 10 நிமிடங்களில் இந்த தெளிப்பான்கள் மூலம் தெளிக்கவும், ஏக்கருக்கு ரூ. 600 மட்டுமே செலவு ஆவதால் நேரமும், கூலியும் மிச்சமாவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிள்ளையார்சாமி, சிவன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×