நிலத்தடி நீர் விழிப்புணர்வு முகாம்

அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளியில் நிலத்தடி நீர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிலத்தடி நீர் விழிப்புணர்வு முகாம்
Published on

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் நிலத்தடி நீர் விழிப்புணர்வு முகாம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். பரமக்குடி நிலநீர் உப கோட்டத்தின் பொறியாளர் சந்திரன் முன்னிலை வகித்து ஜல் சக்தி அபியான் குறித்து பேசினார்.

தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். ராம்கோ சிமெண்ட் தோட்டக்கலைப் பிரிவின் பொறியாளர் ஈஸ்வரன், ராம்கோ டெக்ஸ்டைல் மண்டல மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ்குமார், தன்னார்வ தொண்டு நிறுவனமான துளி அமைப்பின் தலைவர் ராம்குமார், விஷ்ணு ஆகியோரும் பேசினர். நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு காணொளிக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. மாணவர்களுக்குவினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

விருதுநகர் நீர்வளத்துறை நிலநீர்ப்பிரிவு அலுவலர் சந்திரமோகன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் உள்ளிட்ட சமூக அறிவியல் மன்ற ஆசிரியர்-ஆசிரியைகள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com