பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நல்லாட்சி வாரம்

பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நல்லாட்சி வாரம் நடக்கிறது. அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நல்லாட்சி வாரம்
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

"பிரஷாசன் காவ்ன் கி அவுர் - PRASHASHAN GAON KI AUR - 2022" என்ற தலைப்பில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், சேவைகளை மேம்படுத்துவதற்கும், நாடு தழுவிய பிரச்சாரம் நாளை (19-ந் தேதி) முதல் 25-ந் தேதி வரை "நல்லாட்சி வாரமாக"(Good Governance Week) நடக்கிறது. பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கும், சேவைகள் வழங்குவதற்கும் சிறப்பு முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மேற்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.

இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம். மேலும் அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com