search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் ஆடுகள்
    X

    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கியபோது எடுத்த படம். 

    ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் ஆடுகள்

    • விருதுநகர் மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் ஆடுகள் வழங்கப்பட்டது.
    • பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்தில் வழங்கப்பட்டன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை சிபியோ பள்ளி வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கப்படுகிறது.

    பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் இந்த திட்டத்தின் கீழ் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்100 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆடுகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ரகுராமன் எம்.எல்.ஏ. சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பஞ்சவர்ணம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ரவிசந்திரன், துணை இயக்குநர் கோவில்ராஜா, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×