search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்கு
    X

    முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்கு

    • முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
    • லஞ்ச ஒழிப்புத்துறையில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனக்கூறி மிரட்டினார்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளராக இருப்பவர் முத்துச்சாமி (வயது55). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 21-2-2023-ல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் செல்போனில் தொடர்பு கொண்டு தான் அனுப்பும் நபரிடம் ரூ.10 ஆயிரம் கொடுக்குமாறு கேட்டார். ஆனால் கட்சிகளுக்கு பணம் தருவதில்லை என கூறி மறுத்துவிட்டேன். இந்தநிலையில் அவர் நேரில் வந்து என்னை சந்தித்தார். அப்போது நீங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனக்கூறி மிரட்டினார். இதுகுறித்து நான் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜிடம் கூறினேன். அதுகுறித்து விசாரிப்பதாக கூறிய அவர், அதன் பின்னர் என்னை தொடர்பு கொண்டார். என்னை பற்றி இன்பத்தமிழன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் செய்துள்ளதாகவும், அதனால் தற்போது ரூ.10 லட்சம் கேட்பதாகவும் கொடுக்காவிட்டால் லஞ்சஒழிப்புத்துறையின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று மிரட்டுவதாகவும் கூறினார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் பேரில் இன்பத்தமிழன் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×