search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி
    X

    இறுதி ேபாட்டியில் வெற்றி பெற்ற விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி பரிசு வழங்கினார்.

    மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி

    • மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

    விருதுநகர்

    இந்தியாவின் சிறந்த ஆக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந் தேதியை இந்திய தேசிய விளையாட்டு நாளாக கடைபிடிக்கிறது.

    அதனப்படையில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் 14-வயதிற்குட்பட்ட மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரணி எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் விருதுநகர் காமராஜர் அகாடமி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளும், 14-வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஆக்கி போட்டியில், விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி இந்து நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரணி எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராஜபாளையம் அகாடமி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி, ஆக்கி விளையாடியபடி சிவகாசி உழவர் சந்தை முதல் சாட்சியாபுரம் வரை சென்று நோபல் உலக சாதனை பெற்ற வி.எஸ்.கே.டி. பதின்ம மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9 வயதான ஜியாஸ்ரீ கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×