search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளீஸ்வரி கல்லூரியில் சொற்பொழிவு
    X

    இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் செந்தில்குமார் பேசினார்.

    காளீஸ்வரி கல்லூரியில் சொற்பொழிவு

    • காளீஸ்வரி கல்லூரியில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
    • முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    துறைத் தலைவர்குமரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் செந்தில்குமார் கலந்து கொண்டு ''ஸ்பின்ட்ரோனிக்ஸ் பயன்பாடுகளுக்கான காந்த நானோ துகள்களின் தொகுப்பு'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசுகையில், நானோ தொழில்நுட்பம். நானோ காந்தப் பொருட்களின் பண்புகள் மற்றும் தற்காலத்தில் ஸ்பின்ட்ரோனிக்ஸ், பயன்பாடுகள் பற்றி விளக்கினார். மேலும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சி படிப்புக்கான வாய்ப்புகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்வில் இயற்பியல் துறையைச் சேர்ந்த 20 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இயற்பியல் துறை 3-ம் ஆண்டு மாணவி ரிஸ்வானா வரவேற்றார். 2-ம் ஆண்டு மாணவி கார்த்திகா நன்றி கூறினார்.

    Next Story
    ×