search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.650 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.351.97 கோடி வங்கி கடன்கள் வழங்கல்
    X

    கருத்தரங்கில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் வங்கி தொடர்பு குறித்த புத்தகத்தை கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.

    ரூ.650 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.351.97 கோடி வங்கி கடன்கள் வழங்கல்

    • விருதுநகர் மாவட்ட மகளிர் குழுக்களுக்கு ரூ.650 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.351.97 கோடி வங்கி கடன்கள் வழங்கப்பட்டது.
    • சுய உதவிக் குழுக்களின் பயனாளிகளுக்கான மானியத்தை வங்கி கணக்கிலேயே வழங்க இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் பயிற்சி கருத்தரங்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்தில், வங்கி களின் பங்கு குறித்தும், வங்கிகள் நிலையான வட்டி வருமானம் மற்றும் முறையாக கடனை செலுத்து வதால் வட்டி மானியம் பெறுவதில் உள்ள தடைகள் அகற்றுவது பற்றியும், கடன் திரும்ப கிடைப்பதில் உள்ள நம்பகத் தன்மை குறித்தும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கி விதிமுறை கள் குறித்தும், வங்கியாளர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

    இனி வரும் காலங்களில் தனிநபர் மற்றும் குழுக்கடன் பெறும் சுய உதவிக் குழுக்களின் பயனாளிகளுக்கான மானியத்தை அவர்களது வங்கி கணக்கிலேயே வழங்குவதற்கான இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்ட த்தில் 2022-23-ம் நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.650 கோடி கடன் உதவிக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்போது வரை ரூ.351.97 கோடி வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் அதிக தொழில்களை நம்பி இருக்கக்கூடிய மாவட்டமாக இருந்து வருகிறது. வங்கியாளர்கள் தகுதியான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2021-22-ம் ஆண்டு அதிக கடன் உதவி வழங்கிய 8 மாவட்ட அளவிலான வங்கிகளுக்கும், 10 மாவட்ட அளவிலான வங்கி கிளைகளுக்கும் பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    Next Story
    ×