search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் ரெயில் நிலையத்தில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்
    X

    விருதுநகர் ரெயில் நிலையத்தில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்

    • விருதுநகர் ரெயில் நிலையத்தில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படுகிறது.
    • எம்.பி.-அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    விருதுநகர்

    மதுரை கோட்டத்தில் 4-வது பெரிய ரெயில் நிலையமான விருதுநகர் சந்திப்பு ரெயில் நிலை யத்தை ரூ.15 கோடியில் மேம்படுத்த அம்ருத்திட்டத்தின் கீழ் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ரூ.8 கோடி மதிப்பில் ரெயில் நிலைய முகப்பு நவீனப்படுத்தப்படு வதுடன் ரூ.17 கோடியில் ரெயில்நிலைய உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படுகிறது.

    1-வது நடைமேடை முதல் 5-வது நடைமேடை வரை மேம்பாலம் அமைத்தல், நடைமேடை களுக்கு மேற்கூரை அமைத்தல், விப்ட் வசதி, நவீன கழிவறை வசதிகள் கிழக்கு பகுதியில் நுழை வாயில் டிஜிட்டல்போர்டு, மழை நீர் வடிகால், உணவு விடுதி வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப் பட உள்ளது. இத்திட்டம் வருகிற 5-ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மதுரை மண்டல ரெயில்வே அதிகாரிகள் மாணிக்கம்தாகூர் எம்.பி.யுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர். முதலில் ரெயில் நிலைய முகப்பு நவீனப்படுத்தப்படும் அதன் பின்னர் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தனர். அப்போது மாணிக்கம் தாகூர் எம்.பி. உள் கட்ட மைப்பு வசதிகள் மேம்படுத்துவதில் தாமதம் கூடாது என வலியுறுத் தினார். மேலும் ரெயில் நிலையத்தின் முன்பு வாகனங்கள் நிறுத்துமிடம் முறையாக அமைக்க வேண்டும், ரெயில் நிலை யத்தில் முறையான விசாரணை அலுவலகம், ரெயில்கள் குறித்த அறி விப்பு ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகளை கிடப்பில் போடாமல் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    Next Story
    ×