search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்
    X

    குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்

    • குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டப்பிரிவு 5ன்படி, தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க உரிய விசாரணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு தெரிவிப்பதற்காக தமிழக அரசு ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தது.

    அதில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செயலாளராகவும், சிவகாசி பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், எல்.பி.எப். தொழிற்சங்கத்தை சேர்ந்த மாடசாமி, சி.ஐ.டியு. சார்ந்த மகாலட்சுமி, ஏ.ஐ.டியு.சி. ஜீவானந்தம், கோவில்பட்டி விஜய்ஆனந்த், அகில இந்திய சேம்பர் ஆப் மேட்ச் இன்டஸ்ட்ரீஸ் செயலாளர் நூர்முகமது, செங்கன் மேட்ச் இன்டஸ்டிரீஸ் உரிமையாளர் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

    இந்த குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் மற்றும் களப்பணி சாத்தூரில் அமைந்துள்ள ஜோதி மேட்ச் ஒர்க்ஸ், மலைமகுடம் மேட்ச் ஒர்க்ஸ், சிவகாசி தாலுகா சித்துராஜபுரத்தில் உள்ள சாந்தி கலர் மேட்ச் ஒர்க்ஸ், விருதுநகர் தாலுகா சந்திரகிரி புரத்தில் அமைந்துள்ள தி பிரசிடெண்ட் மேட்ச் கம்பெனியிலும் நடந்தது.

    இந்த களப்பணியின் போது தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழி லாளர்கள் மற்றும் வேலை யளிப்பவர்களிடம் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக கருத்துக் கேட்கப்பட்டது.

    இந்த களப்பணியில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவர், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், செயலாளர்-விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ், மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×